hanifa video

திங்கள், 21 நவம்பர், 2011

ஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது.. இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும். காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம். தவிர தாதுப் பொருள்களும், வைட்டமின் ‘ஏ’, வைட்டமின் ‘சி’, முதலான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. ஆலிவ் மரம் நன்கு வளர சூரிய ஒளியும், உலர் நிலமும், நல்ல கோடை வெயிலும், மிதமான குளிரும் தேவை. ‘திரவத்தங்கம்’ என்று இந்த எண்ணெய் மதிக்கப்படுகிறது. மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும் ஆலிவ் எண்ணெய் தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது. ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம். இதயத்துக்கு ஏற்ற சமையல் எண்ணெய் மார்பக புற்றுநோயை ஆலிவ் எண்ணெய் தடுக்கும். பெண்கள் தினசரி உணவில் 10 ஸ்பூன் வரை ஆலிவ் எண்ணெய் சேர்த்துக் கொண்டால், மார்பக புற்றுநோயை தடுக்கலாம் என்று பார்சிலோனா ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிற்து. புற்றுநோயை உண்டாக்கும் ஜீன்களை தடுப்பதில் ஆலிவ் எண்ணெயின் பங்கு பற்றி பார்சிலோனாவின் ஆடனோமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். மனித உடலுக்கு பொருத்தமான உயிரினமான எலியிடம் ஆராய்ச்சி நடத்தப்படது. தினசரி ஆலிவ் எண்ணெய் சேர்த்த உணவை எலிகளுக்கு அளித்து வந்தனர். அதில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய ஜீன்களை ஆலிவ் எண்ணெய் அழித்தொழிப்பது தெரிய வந்தது. மேலும், மரபணுவுக்கு சேதம் ஏற்படாமலும் அது பாதுகாப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம், மரபணு பாதிப்பால் ஏற்படக்கூடிய மற்ற புற்றுநோய்களையும் ஆலி எண்ணெய் தடுக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். இதுபற்றி ஆராய்ச்சியாளர் எஜுர்ட் எஸ்ரிச் கூறுகையில், " பெண்கள் தினசரி உணவில் 50 மிலி அல்லது 10 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம் " என்றார். உலக அளவில் பெண்களின் உயிர் பறிக்கும் நோயாக முதலிடத்தில் இருப்பது மார்பக புற்றுநோய். அதை கட்டுப்படுத்த ஆலிவ் எண்ணெய் உதவும் என்றார் அவர். ஸ்பெயின் நாட்டில் நடந்த மற்றொரு ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்றார். இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. ந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

புதன், 12 அக்டோபர், 2011

மனைவியை கொலை செய்தவர் தூக்கிட்டு தற்கொலை

கருத்தை பதிவு செய்ய கோபிசெட்டிபாளையம்: கேரள மாநிலம் மூணாறில், மனைவி சாமிளாவை கொலை செய்த மகேஷ்குமார், ஈரோட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரது பையில் இருந்து, கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர், பட்டிமணியக்காரன் பாளையத்தை சேர்ந்த தம்பதி, சுப்பிரமணியன், 62 - அமிர்தம், 55. இவர்களது பூர்வீகம் கோவை. இவர்களுக்கு, மகேஷ்குமார் என்ற மகனும், பிரபா என்ற மகளும் உள்ளனர். கடந்த 13 ஆண்டுகளுக்கு முன், பெற்றோரிடம் கோபித்த மகேஷ்குமார், வீட்டை விட்டு வெளியேறி விட்டார். பின், படித்து, பெங்களூரில் பணியில் சேர்ந்து, சென்னையை சேர்ந்த சாமிளாவை காதலித்து, மூன்றாண்டுகளுக்கு முன், திருமணமும் செய்து கொண்டார். சில தினங்களுக்கு முன், சாமிளாவை மூணாறுக்கு அழைத்துச் சென்ற மகேஷ்குமார், அங்கு ஒரு லாட்ஜில் அவரை கொலை செய்து, அங்கிருந்து தப்பியோடினார். போலீசார் தன்னைத் தேடுவதை அறிந்த மகேஷ்குமார், 13 ஆண்டுக்கு பின், பட்டிமணியக்காரன் பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டருகே வந்தார். பெற்றோரை பார்க்காமல், வீடு அருகிலுள்ள தோட்டத்தில், மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பெற்றோருக்குத் தெரியாமல், அவர்கள் வீட்டு குளியலறையில், மகேஷ்குமார் விட்டுச் சென்ற பை கிடந்தது. அதில், ஒரு நோட்டுப் புத்தகத்தில், பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். நம்பியூர் போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர். சியாமளா கொலை வழக்கு தொடர்பாக விசாரித்து வந்த மூணாறு போலீசார், மகேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டதால், வழக்கை முடிக்க முடிவு செய்துள்ளனர். மகேஷ்குமார் கடிதத்தில் எழுதியிருந்தது என்ன? வீட்டு குளியலறையில் அவர் வைத்துச் சென்ற பையில், ஒரு நோட்டுப் புத்தகம் இருந்தது. அதில், 26 பக்கத்துக்கு, தன் குடும்பத்தினருக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்திருந்தார். கடிதத்தில் அவர் எழுதியதாவது: தந்தைக்கு...: கடந்த பத்து ஆண்டுகளாக நான், "அப்பா' என்று கூப்பிடக்கூட இல்லை. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்ககிட்ட பேசணும்னு நெறைய வாட்டி நினைப்பேன். என் வாழ்க்கை கஷ்டப்பட, நீங்கள் காரணம் இல்லை. எல்லாம் நான் பிறந்த நேரம்; விதி. நீங்க எதுவும் வருத்தப்பட வேண்டாம். அடுத்த ஜென்மத்தில் நான் உங்களுக்கு பெண் குழந்தையாக பிறப்பேன். இந்த ஜென்மத்தில், இதுவரை ஒரு பொறுப்பான பையனாக இல்லை. தாய்க்கு...: உங்களுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற முடியாமல் போயிடுச்சு. என்னை நீங்கள் அதிகமாக புரிந்து வைத்துள்ளீர்கள். தங்கை பிரபாவுக்கு...: தங்கச்சி இருந்தும், தங்கச்சியை அதிகமாக கூப்பிட்டது இல்லை. என்னை ஆரம்பத்தில் இருந்தே புரிந்து இருக்கிறாய். என் மீது கால் வைத்து, நீ தூங்கியதை நினைத்தால் கண்ணீர் வருகிறது. மதனை கவனித்துக் கொள். பிரபாவின் கணவர் மதனுக்கு...: இந்த உலகத்திலேயே உங்களை அதிகமாக பிடிக்கும். எங்கள் குடும்பத்துக்கு அவ்வளவு செய்துள்ளீர்கள். உங்களிடம் எந்த கோரிக்கையும் வைக்க முடியாது. அம்மா, அப்பா, தங்கையை பார்த்துக் கொள்ளுங்கள். தயவு செய்து என் பேக்கில் இருக்கிற ஸ்டேட்மென்டை போலீசில் கொடுங்க. சாமிளா சாவை பிரிய முடியலை. இவ்வாறு மகேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். கொலைக்கான காரணம் புரியாத புதிர்: "மனைவி மீதான சந்தேகத்தால், அவரைக் கண்டித்தார் மகேஷ்குமார். கோபமுற்ற சாமிளா, ஆள் வைத்து, மகேஷை மிரட்டியதாகவும், சென்னை, கோயம்பேடு போலீசாரிடம் மகேஷ்குமார் அளித்த புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும், அவர்களிடையே பிரச்னை தீரவில்லை; விவாகரத்து வழக்கு தொடர்ந்தனர்' என, மகேஷ்குமாரின் உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், நேற்று முன்தினம், சாமிளாவின் சகோதரி கொடுத்திருந்த பேட்டியில், "சாமிளாவும், நானும் ஒரே விடுதியில் தங்கியிருந்தோம். சியாமளாவுக்கும், அவள் கணவருக்கும் இடையே தகராறு உண்டு. எனவே, விவாகரத்து கோரியிருந்தனர். ஆனால், மகேஷ்குமாருடன், சாமிளா அடிக்கடி போனில் பேசியது எனக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவளுடன் நான் பேசவில்லை. சில தினங்களுக்கு முன், "மகேஷ்குமார் திருந்தி விட்டார் என்றும், தன்னை மாமியார் வீட்டுக்குக் கூட்டிச் செல்வதாகக் கூறியுள்ளார் என்றும், என் தாயிடம் கூறியிருந்தார்' என்றார். இரு தரப்பினரும் வெவ்வேறு கருத்துக்கள் கூறியுள்ளதால், கொலைக்கான உண்மையான காரணம் புரியவில்லை. சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள்: மகேஷ்குமார் கடிதம்: மனைவி சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் பெயர்களை கூறி, போலீசாருக்கு மகேஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார். மூணாறு லாட்ஜில் மனைவி சாமிளாவை கொலை செய்துவிட்டு சொந்த ஊரில் தானும் தற்கொலை செய்து கொண்ட மகேஷ்குமார், 28, போலீசாருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வாழ்ந்தால் மரியாதையோடு, மானத்தோடு, நான்கு பேர் பாராட்டும் வகையில் கம்பீரமாகவும், சந்தோஷமாகவும் வாழ வேண்டும். நல்ல முறையில் வாழ எவ்வளவோ முயற்சி செய்தேன். அதற்காக சாமிளாவை எத்தனையோ முறை விட்டுக் கொடுத்து வாழ்ந்தேன். கெஞ்சி, மிரட்டி, அழுது கூட பார்த்தேன். அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு போய்விட்டாள். என்கிட்ட பொய் சொல்வதே வாடிக்கையாகி விட்டது. ஒவ்வொரு நிமிடமும் மாறிவிட மாட்டாளா? என, நினைப்பேன். இதற்காக மூன்று அல்லது நான்கு நாள் சுற்றுலா அழைத்து சென்று, என் காதலை, உணர்வுபூர்வமாக பக்கத்தில் இருந்து அவளுக்கு காட்டினால், திருந்த வாய்ப்பு இருக்கும் என, மூணாறு சென்றோம். திருந்தவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதென நினைத்தேன். அவள் மனதில் எந்த மாற்றமும் இல்லை. பழைய சாமிளா எனக்கு கிடைக்கவில்லை. வாய்த்தகராறு இப்படியாகி விட்டது. ஒரு தாய், குழந்தையை மாய்த்து விட்டு; எப்படி அவளும் மாய்த்துக் கொள்வாளோ அப்படித்தான் இதுவும். என் உலகம், கனவு, லட்சியம் எல்லாமே மனைவி சாமிளா தான். சாமிளாவை என் உடலில் இருந்தும், மனதில் இருந்தும் பிரிக்க முடியாது. ரத்தத்தில் ஊறியது அவளுக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதுதவிர, மகேஷ்குமார் ஆங்கிலத்தில் எழுதிய கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில், சாமிளாவுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பியவர்கள் விபரம் உள்ளது. சென்னை திருவான்மியூர் சந்தோஷ்ராம், கொளத்தூர் சுரேஷ்குமார், கொளத்தூர் பாபுநகர் கார்த்திக், மதுரை விளாங்குடி அரவிந்த், விஜய் "டிவி' காமெடி நடிகர் சரவணன், சென்னை அண்ணாநகர் நடராஜபுரம் கணேஷ், சிவா, ராஜ்மோகன், சரவணா, சற்குணா, சுதாகர் ஆகிய, 11 பேர், நள்ளிரவிலும் ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்புவதாகவும், இதில், "அரவிந்த் - மெயின் பர்சன்' (முக்கிய நபர்) என குறிப்பிட்டுள்ளார். வரப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

மலர்களில் சாயம்


அன்பார்ந்த நண்பர்களே இது ஒரு புதிய தொடர் பல்லவர் மன்னர்களின் அரசணையில் பதவியில் இருந்த மந்திரின் அவர் தனிபட்ட வாழ்கையின் வரலாற்று தொடர் உங்கள் புதிய வாழ்கையில் இது ஒரு புத்துயிறும் புதினமும் ஏர்படுத்தும் நாளை ஆகஸ்ட் 24= 8=2011 முதல் தொடர்ந்து படியுங்கள் வாசகர்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் கருத்துறைகளை வறவேற்கிறோம் அனுப்பவேண்டிய முகவரி.( sarinplaza@gmail.com அன்புடன் ஏ.டி.ஹெச்

சனி, 20 ஆகஸ்ட், 2011


ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதைப் போல விட்டமின் மாத்திரைகள் என்றவுடன், நம் மக்கள் சத்து மாத்திரை என்ற புனிதமான சொல்லைப் போட்டு, அதனை நேரந்தவறாமல் உண்டு வருவதை நாம் பார்த்திருக்கின்றோம். அம்மாக்கள் பிள்ளை நோஞ்சானாக இருந்தால் மருத்துவரிடம் சென்று, அய்யா எனது பிள்ளை நோஞ்சானாக இருக்கின்றான் ஏதாவது சத்து மாத்திரை அல்லது டானிக் எழுதித் தாருங்கள் என்பார். இவரும் தனக்குப் பிடித்தமான? கம்பெனியின் டானிக் அல்லது மாத்திரையை எழுதிக் கொடுப்பார். இவ்வாறாக,


இன்று படித்தவர்களிலிருந்த பாமரன் வரை மயங்கிக் கிடக்கும் பொருட்களில் விட்டமின் மாத்திரைகள் ஒன்று. உடல் ஆரோக்கியமாக இருப்பவர்கள் கூட தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தால் இதை சாப்பிடத் தயங்குவதில்லை. இந்த மாத்திரைகளை சத்து மாத்திரைகள் என்று அறிந்து கொண்ட மக்களுக்கு, அதன் மறுபக்கத்தைப் பற்றியும், இது ஒரு உலக மகா மோசடி என்பது பற்றியும் அறிய வாய்ப்பில்லை.

***

இந்த சத்து மாத்திரைகளை உடல் ஏற்றுக் கொள்கிறதா? இதனால் ஏற்படும் கெடுதல்கள் என்ன? என்பதை இனி நாம் பார்ப்போம்.

ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்! நமது நாக்கை இறைவன் வெறும் சுவை உணரும் சதையாக மட்டும் படைக்கவில்லை. நாக்கில் படாமல், அதன் உமிழ் நீரில் கலக்காமல் உண்ணக் கூடிய எந்தப் பொருளும் முறையாக ஜீரணிக்கப்படுவதில்லை. முறையாக ஜீரணிக்கப்படாத உணவுச் சத்துக்கள் நேராக கிட்னியைப் பாதிக்கச் செய்கின்றன. இவ்வாறு முறையாக ஜீரணிக்கப்படாத உணவுப் பொருள் எவ்வளவு உயர்வானதாக இருந்தாலும் அவற்றை நம் உடல் நிராகரித்து விடுகின்றது.


நாக்கில் 9000 க்கு மேற்பட்ட சுவை உணர்வு மொட்டுக்கள் இருக்கின்றன. இவைகள் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து பெறப்பட்ட சத்துக்களை சுவையின் அடிப்படையில் பிரித்து சம்பந்தப்பட்ட உறுப்புக்கு அனுப்புகிறது. அதன் மூலம் அந்தந்த உறுப்புக்கள் பலமடைகின்றன. உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றது. இவையெல்லாம் நாம் உணவை மிகவும் நன்றாக மென்று சுவைத்து (உமிழ் நீர்கலந்து) நிதானமாகச் சாப்பிடும் போது தான் நடைபெறும்.


உதாரணமாக பாகற்காயை சாப்பிடுகிறோம். அதன் கசப்பு சுவை நாக்கால் அறியப்பட்டு உடன் மூளைக்கு தெரியப்படுத்தப்படுகின்றது. இந்த தகவல் மூளைக்குக் கிடைத்தவுடன் கசப்புச் சுவையுடன் கூடிய சத்து எந்த உறுப்புக்குத் தேவையோ அவைகளுக்குத் தகவல் அனுப்புகிறது.


கசப்பு சுவை தேவைப்படும் உடல் உறுப்புக்கள் இதயம், இதய மேல் உறை, சிறுகுடல் ஆகியவைகளாகும்.

எனவே இந்த தகவல் வந்ததும் இந்த உறுப்புக்கள் தயார் நிலையில் இருக்கின்றன. பாகற்காயை நாம் மென்று சுவைத்து சாப்பிட்ட அதன் சத்தை உடனடியாக அவை கிரகித்துக் கொள்கின்றன.

இது போன்றே இனிப்பு சுவையானது வயிறு மற்றும் மண்ணீரலுக்கும் - உவர்ப்பு சுவை சிறுநீரகம், சிறுநீர்ப்பைக்கும் - புளிப்பு சுவை பித்தப்பை, கல்லீரலுக்கும் - கார சுவை நுரையீரல், பெருங்குடலுக்கும் பயன்படுகிறது. மேற்குறிப்பிட்ட உறுப்புகளின் கீழ் செயல்படுபவையே மற்ற உறுப்புக்கள் என்பதையும் வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இனிப்பு சுவை வயிற்றுக்கு சக்தியளிக்கும் என்பதால் இனிப்பைத் தின்பதோ, உப்பு சுவை கிட்னிக்கு சக்தியளிக்கும் என்பதால் நேரடியாக உப்பைத் தின்பதோ, சரியான அணுகுமுறையல்ல.

சாதாரணமாக நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகளும் கலந்து தான் இருக்கின்றன. ஒரு பிடி வெறும் சோற்றை வாயில் இட்டு நன்றாக மென்று பாருங்கள். முதலில் லேசான இனிப்பு சுவை தெரியும். பிறகு சிறிது உவர்ப்பு சுவை தெரியும். நன்றாக மென்று முடித்த பிறகு சப்பென்று ஒரு சுவையும் தெரியாது இருக்கும். இது போன்றே ஒவ்வொரு உணவுப் பொருளிலும் பல வகை சுவைகள் கலந்து இருக்கிறது. சில உணவு பொருட்களில் சில சுவை அதிகமாக இருக்கும். உதாரணமாக பாகற்காயில் கசப்பு சுவையும், பழம், தேன் ஆகியவற்றில் இனிப்பு சுவையும்.

நாம் உணவை நன்றாக நிதானமாக சுவைத்துச் சாப்பிடும்போது தான் நாக்கால் சுவை உணரப்பட்டு மூளைக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்த சுவை சம்பந்தப்பட்ட உறுப்புகளுக்கு சிக்னல் அனுப்பப்பட்டு அவைகள் அந்த சத்தைப் பெறுகின்றன. அப்படியில்லாமல் விரைவாக சாப்பிடும் போது நாக்கின் உணர்வு மொட்டுக்களில் முழுமையாக அந்த உணவு படுவதில்லை. உமிழ்நீரிலும் கலப்பதில்லை. இதனால் நாக்கால் சுவைகளை தெளிவாகப் பிரித்து மூளைக்கு தகவல் தெரிவிக்க முடிவதில்லை. சரியான சிக்னல் கிடைக்காத காரணத்தினால் அந்த உணவின் சத்துக்கள் அனைத்து உறுப்புகளினாலும் நிராகரிக்கப்பட்டு, இறுதியில் வேறு வழியில்லாமல், கிட்னியைச் சென்று அடைகின்றன. கிட்னியில் ஓரளவே இந்த சத்துக்களைச் சேமிக்க முடியும். அளவைத் தாண்டும் போது கிட்னியும் தொடர்ந்து நிராகரிக்க ஆரம்பித்து விடுகின்றது. இதன் விளைவு தான் உடல் பெறுத்துப் போவது. மேலும் உடலின் பல உறுப்புகள் பலமிழந்து பல வியாதிகள் உருவாகின்றது. அதிகமாக சாப்பிடும் அவைகளை முறையாக சாப்பிடாத காரணத்தால் உடல் பெருக்கின்றது
. பல நோய்கள் உருவாகின்றது.

****

விட்டமின் மாத்திரைகளை நாம் எப்படி சாப்பிடுகின்றோம். இப்போது யோசனை செய்து பாருங்கள்?

வாயில் போட்டு நாக்கில் கூடப் படாமல் விழுங்கி விடுகின்றோம். இந்த மாத்திரைகளை நம் உடல் உறுப்புக்கள் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை. இந்த மாத்திரைகளால் கிட்னியும்,மண்ணீரல், கல்;லீரல் என்று பாதிக்கப்பட்டு உடல் நோய்களைப் பெற்றுக் கொள்வது தான் மிச்சம்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். விழுங்காமல் மென்று தின்றால் அந்த சத்துக்களை உடல் கிரகித்துக் கொள்ளுமாவென்று? நாம் உடல் அமைப்பு இரசாயன கலவைகளையும், அதனால் உண்டான செயற்கைச் சுவைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை.


சிறு விதையிலிருந்து வளர்ந்து குறிப்பிட்ட காலத்தில் சுவையில்லா மண்ணிலிருந்து சுவையுள்ள ஆரஞ்சுப் பழத்தைத் தருகின்றது. அதன் தோளை உரித்து, அதன் சுளைகளை வாயில் இட்டு சுவைத்துச் சாப்பிடும் போது தான் அதன் உண்மையான சத்துக்கள் கிடைக்கின்றன. விட்டமின் சி மாத்திரைகளாக சாப்பிடும் போது அவைகள் மண்ணுக்குக் கூடப் பயன்படாமல் போகின்றன.


ஆரோக்கியமான இரண்டு நபர்களிடம் ஒருவரிடம் ஆரஞ்சுப் பழங்களை மட்டும் கொடுத்து ஒரு 3 நாள்கள் ஒரு தனியறையில் வைப்போம். மற்ற ஒருவரிடம் விட்டமின் சி மாத்திரையைக் கொடுத்து அவரையும் தனியறையில் வைப்போம். யார் ஆரோக்கியமாக இருக்கின்றார் என்பதை நான்காவது நாள் பாருங்கள்.

இதே போல் ஒருவரிடம் சாதாரண ரொட்டிகளை மட்டும் கொடுப்போம். மற்றவரிடம் ரொட்டியை விட பல மடங்கு சத்துள்ளதாக கருதப்படும் மல்டிவிட்டமின் மாத்திரைகளைக் கொடுப்போம். நான்காவது நாள் யார் ஆரோக்கியமாக வெளியே வருவார் என்றால், ஆரஞ்சு சாப்பிட்டவரும், சாதாரண ரொட்டி சாப்பிட்டவரும் ஆரோக்கியமாகவும், விட்டமின் சி யையும், மல்ட்டி விட்டமின் சாப்பிட்டவர்கள் ஆரோக்கியத்தை இழந்த நிலையிலும் வெளியே வருவார்கள்.

***

விட்டமின் மாத்திரைகளில் உடம்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருக்கின்றன என்று கூறும் பொழுது, மருத்துவமனைகளில் ஏன் ரொட்டியும், பாலும், வெண்ணையையும் தருகின்றார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது!?

விட்டமின் மாத்திரைகள் தேவையான பலத்தைக் கொடுக்கும் என்றால், இராணுவ வீரர்கள் தங்களது முதுகில் ஏன் சோத்து மூட்டைகளைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும்? இந்த சோத்து மூட்டைகளுக்குப் பதிலாக எடை குறைந்த எளிதில் கொண்டு செல்லக் கூடிய இந்த சத்து மாத்திரைகளைச் சிரமமின்றி கொண்டு செல்ல முடியுமே என ஏன் சிந்திப்பதில்லை?

இந்த மாத்திரைகள் எவ்வளவு தான் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அதிக சத்துள்ளவை என்று கூறப்பட்டாலும் தினமும் ஒவ்வொரு வேளைச் சாப்பாட்டிற்குப் பதிலாக இந்த மாத்திரைகளை உட்கொள்ள முடியுமா?

விவசாயி வானத்தையும், பூமியையும் மாறி மாறிப் பார்த்து, நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தப் பாடுபட்டு, உணவுப் பொருட்களை விளைவிக்க வேண்டிய தேவையில்லையே!

பஞ்சத்தால் வாடும் மக்களுக்கு பிரியாணிப் பொட்டலத்தையும், கஞ்சித் தொட்டியையும் காட்டுவதற்குப் பதிலாக விட்டமின் சத்து மாத்திரைகளை வழங்கி விட்டுப் போகலாமே!

இதற்கெல்லாம் பதில்கள் எங்கும் கிடையாது. விட்டமின்களையும் தாதுப் பொருட்களையும் நாம் உண்ணும் இயற்கையான உணவுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் தன்மையுடனேயே நம் உடல் உறுப்புக்கள் அமையப் பெற்றிருக்கின்றன. நம் உடலே நம் உடலுக்குத் தேவையான சில சத்துக்களைத் தானே தயாரித்துக் கொள்ளும் சக்தியையும் பெற்றிருக்கின்றது.

உதாரணத்திற்கு மாலை வெயிலில் நம் உடல் விட்டமின் டி யை தயாரித்துக் கொள்கிறது. இதே போல் கல்லீரல், தோல் போன்று மற்ற உறுப்புக்களும் தேவைக்கேற்றபடி செயல்பட்டு விட்டமின் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றன.

செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட விட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்வதில்லை. அவைகளை புறக்கணித்து வெளித்தள்ளி விடுகின்றன. இப்படி ஒரு வலுவான ஆற்றல் நம் உடலுக்கு இருக்கின்றது. செயற்கை சத்துக்களை அந்நியப் பொருட்களாகக் கருதி கழிவுகளாக நினைத்து, நமது உடல் நிராகரித்து விடுகின்றது.

நிர்ப்பந்தமாக இவைகளை உடலில் செலுத்தும் போது உடல் உறுப்புக்கள் நன்மைக்குப் பதில் தீங்கையே பெற்றுக் கொள்கின்றன, அதன் மூலம் பழுதடைய ஆரம்பிக்கின்றன.

விட்டமின் மாத்திரைகளை மட்டுமல்ல, இதே போன்ற அணுகு முறையில் தயாரிக்கப்படும் சத்து மிக்க பானங்களுக்கான கலவைப் பொடிகள், மற்றும் குழந்தை உணவுகள் என்று பெயரிட்டு விற்கப்படும் அனைத்து உணவுப் பொருட்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.

எனவே, சாதாரணமாக இயற்கையான உணவுகளை உண்டு இன்பமாக வாழக் கற்றுக் கொள்வோம். கற்றுக் கொடுப்போம். இதன் மூலம் மருந்தில்லா உலகம் படைத்து மனித நேயம் காப்போம்.


**

நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை கிட்னி சீராக சுத்தம் செய்துவிடும், ஆனால் மாத்திரைகளால் வரும் சத்துக்கள் அதிகமானால் அதை கிட்னியால் சுத்தம் செய்ய முடியாது. இதனால் கிட்னி சம்மந்தமான பிரச்சிகைகள் வர அதிகம் வாய்ப்புள்ளது

யோசிப்போம் :)

What is the Jan Lokpal Bill, why it's important | ஜன் லோக்பால் என்றால் என்ன? ஏன் இதற்கு இந்த முக்கியத்துவம்?!

What is the Jan Lokpal Bill, why it's important | ஜன் லோக்பால் என்றால் என்ன? ஏன் இதற்கு இந்த முக்கியத்துவம்?!

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் | குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் Dinamalar

குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் | குற்றாலத்தில் நாவல்பழம் விற்பனை அமோகம் Dinamalar: ஆகஸ்ட் 19,2011,01:15 IST
குற்றாலம்:குற்றாலத்தில் அதிகளவில் நாவல்பழம் விற்பனை செய்யப்படுகிறது.குற்றாலம் சீசன் என்றாலே அருவிகளில் தண்ணீர் கொட்டுவதும், அதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வதும்தான் அனைவரின் நினைவுக்கு வரும். மேலும் குற்றால சீசன் காலத்தில் மட்டும் இங்கு விற்பனைக்கு வரும் பழவகைகளை சுற்றுலா பயணிகள் மறக்க மாட்டார்கள். மங்குஸ்தான், முட்டை பழம், ரம்டான், பன்னீர் கொய்யா, துரியன் உள்ளிட்ட பழங்கள் மலைப் பகுதியில் மட்டும் விளையக்கூடியது. இவற்றில் குற்றாலம் மலைப் பகுதியில் விளையும் மங்குஸ்தான், ரம்டான் பழ வகைகளுக்கு தனி சுவை உள்ளது. இதனால் இவற்றின் விற்பனை சீசன் காலத்தில் அமோகமாக இருக்கும்.

இந்த வரிசையில் நாவல் பழமும் இடம் பெற்றுள்ளது. குற்றாலம் பகுதியில் அறுவடை செய்யப்படும் நாவல் பழம் தனி சுவை இருப்பதோடு, அளவிலும் சற்று பெரியதாக இருக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிகளவில் விரும்பி சாப்பிடுகின்றனர். சர்க்கரை கொல்லி மருந்தாக இது பயன்படுவதால் இதற்கு எப்போதும் வரவேற்பு அதிகமாக இருக்கிறது. குற்றாலத்தில் இதன் விற்பனை இப்போது அமோகமாக இருக்கிறது. நாவல் பழம் கிலோவிற்கு 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் நாவல் பழத்தை வாங்கி சாப்பிட்டு மகிழ்கின்றனர்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

திருநெல்வேலி : செங்கோட்டை வட்டாரத்தில் தோட்டக்கலைதுறை சார்பில் 50சதவீத மானிய விலையில் காய்கறி மற்றும் பழ மரக்கன்று விதைகள் வினியோகம் செய்யப்படுகிறது.இது குறித்து செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியிருப்பதாவது;ஆடிப்பட்ட காய்கறி சாகுபடிக்காக தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் காய்கறி விதைகள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.முளைக்கீரையாகவும், தண்டுக்கீரையாகவும் பயிரிட ஏற்ற கோ 2 கீரை விதைகளும், கோ 1 பூசணி விதைகளும் 50 சதவீத மான்ய விலையில் செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.இதுதவிர கொய்யா, சப்போட்டா, ஒட்டு பழ மரக்கன்றுகள் 50 சதவீத மானிய விலையில் விரைவில் வினியோகம் செய்யப்படவுள்ளன. எனவே கொய்யா, சப்போட்டா கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் தேவையை செங்கோட்டை தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.காய்கறி விதைகள், பழமரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் செங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.இத்தகலை உதவி இயக்குநர் பாலசுப்பிரமணியன் அறிக்கையில் கூறியுள்ளார்.

வெள்ளி, 5 ஆகஸ்ட், 2011

ஸ்பெஷல் வடை


தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் சுத்தமாக தண்ணீரில்லாமல் வடியுங்கள். ஆட்டுக்கல்லில் போட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து மெல்லிய வடைகளாக தட்டி, எண்ணெயில் கொள்ளுமளவு போடுங்கள். நடுத்தர தீயில் நன்கு மொறு மொறுப்பாகவும் உள்ளே மெத்தென்றும் வேக வைத்து எடுங்கள்.

மைசூர் போண்டா


தேவையானவை: உளுத்தம்பருப்பு - 1 கப், பச்சரிசி - 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி - 1 துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - 10, பெருங்காயம் - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: உளுத்தம்பருப்பையும், அரிசியையும் ஒன்றாக ஊற வையுங்கள். ஒரு மணிநேரம் ஊறியதும் நன்கு மெத்தென்று அரைத்தெடுங்கள். அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் தெளித்து, அரையுங்கள். இஞ்சி, மிளகாய், பெருங்காயம் மிக்ஸியில் அரைத்து மாவில் சேருங்கள். அத்துடன் பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு, தேங்காய், மிளகு, சீரகம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து சிறு சிறு போண்டாக்களாக உருட்டி போட்டு நன்கு வேக விட்டு எடுங்கள். மிகவும் பாப்புலரான இந்த மைசூர் போண்டா, மாலைச் சிற்றுண்டிக்கும் விருந்துகளுக்கும் ஏற்றது

தவலை வடை


தேவையானவை: பச்சரிசி - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பாசிப்பருப்பு - அரை கப், துவரம்பருப்பு - அரை கப், உளுத்தம்பருப்பு - அரை கப், ஜவ்வரிசி - ஒரு கைப்பிடி, தேங்காய் பல் பல்லாகக் கீறியது - கால் கப், காய்ந்த மிளகாய் - 6, துருவிய இஞ்சி - 1 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயம் - 1 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உப்பு - ருசிக்கு, எண்ணெய் - தேவைக்கு.
செய்முறை: அரிசி, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக ஊறவையுங்கள். உளுத்தம்பருப்பையும் பாசிப்பருப்பையும் தனியாக ஊறவையுங்கள். ஜவ்வரிசியை தனியே ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியபிறகு, அரிசியுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரையுங்கள். பிறகு, ஊறிய பருப்புகளை சேர்த்து, கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த மாவில் பெருங்காயம், தேங்காய், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியாக வைத்துக்கொள்ளுங்கள். கடுகைப் பொரித்து அதில் சேருங்கள். எண்ணெயைக் காயவைத்து, மாவை ஒரு குழிவான கரண்டியில் எடுத்து எண்ணெயில் ஊற்றுங்கள். சிறு தீயில் நன்கு வேகவிட்டு எடுங்கள். மாலை நேரத்துக்கு ஏற்ற மொறுமொறுப்பான ஸ்நாக்ஸ் இது

வகை போண்டா வடை!


தேவையானவை: (மேல் மாவுக்கு) கடலை மாவு - 1 கப், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - ருசிக்கேற்ப, கலர் (விருப்பப்பட்டால்) - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. (பூரணத்துக்கு) உருளைக் கிழங்கு - 1, கேரட் - 1, பீன்ஸ் - 4, பட்டாணி - ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் - 1, பச்சை மிளகாய் - 1, மிளகாய்தூள் - 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - 1 டேபிள்ஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: காய்கறிகளை மிகவும் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து சீரகம் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள். அத்துடன் காய்கறிகளையும் மஞ்சள்தூள், உப்பும் சேர்த்து குறைந்த தீயில் நன்கு வதக்குங்கள். காய்கறிகள் பாதியளவு வெந்ததும் அதனுடன் மிளகாய்தூள் சேர்த்து நன்கு கிளறி வெந்ததும் கரம் மசாலா தூள், எலுமிச்சம்பழச் சாறு, மல்லித்தழை சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்குங்கள். ஆறியதும் உருண்டை பிடித்து வையுங்கள். பிறகு, கடலை மாவுடன் சிறிது உப்பு, ஆப்ப சோடா, (விருப்பப்பட்டால்) கலர் பவுடர், தேவையானால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, காய்கறி உருண்டைகளை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுங்க